உள்ளூர் செய்திகள்

100 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை - மேயர் தினேஷ்குமார் வழங்கினார்

Published On 2023-01-21 07:26 GMT   |   Update On 2023-01-21 07:26 GMT
  • 100 பேருக்கு தொழிலாளர் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவில்வழியில் நடந்தது.
  • நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் 

திருப்பூர்கோவில்வழி பஸ் நிலையம் பகுதியில் மாநகராட்சிதூய்மைப்பணியாளர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் 100 பேருக்கு தொழிலாளர் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி கோவில்வழியில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News