உள்ளூர் செய்திகள்

ஏரியில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட காட்சி.

10 ஏக்கர் ஏரி ஆக்கிரமிப்பு மீட்பு

Published On 2023-02-23 09:58 GMT   |   Update On 2023-02-23 09:58 GMT
  • ஏரியை ஆக்கிரமித்து கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனா்.
  • போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினா்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரம்பட்டி அருகே உள்ள சூரக்கல்மேட்டில் குண்டல் குட்டை ஏரி உள்ளது.

இந்த ஏரி 24 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நிலத்தில் 10 ஏக்கா் நிலத்தை அருகில் வசிப்பவா்கள் ஆக்கிரமித்து கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தனா்.

இதையடுத்து ஏரி நில ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தப்பட்டவா்களுக்கு வருவாய்த் துறையினா் நோட்டிஸ் அனுப்பினா். ஆனாலும் அவர்கள் ஆக்கிரமிப்பை விலக்கிக் கொள்ளாததால் நேற்று ஊத்தங்கரை வட்டாட்சியா் கோவிந்தராஜ், வருவாய்த் துறையினா், சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினா். பின்னா் ஏரியில் புதிதாக கரை கட்டப்பட்டது.

Tags:    

Similar News