உள்ளூர் செய்திகள்
- 4 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த பொய்கை மேம்பாலம் அருகே இன்று காலை முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது தனியார் பஸ் திடீரென மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் இருந்த பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.