செய்திகள்
புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமாரின் நிறைவேறாத ஆசை

Published On 2021-10-30 10:46 IST   |   Update On 2021-10-30 10:46:00 IST
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், தனது அண்ணன் நடிக்க திரைப்படத்தை இயக்கவேண்டும் என்று தனது நண்பர்களிடம் புனித் ராஜ்குமார் கூறிவந்துள்ளார்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் 1976-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், இளைஞரானது முதல் புனித்ராஜ்குமார் தொடர்ந்து திரைப்படத்தில் வந்தார்.



இளைஞராக இருக்கும்போது முதல் நேற்று வரை புனித்ராஜ்குமாருக்கு ஒரு ஆசை இருந்து வந்தது. தனது அண்ணனான சிவராஜ் குமார் நடிக்கும் திரைப்படத்தை இயக்கவேண்டும் என்று புனித் ராஜ்குமாருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருந்து வந்தது.

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், தனது அண்ணன் நடிக்க திரைப்படத்தை இயக்கவேண்டும் என்று தனது நண்பர்களிடம் புனித் ராஜ்குமார் கூறிவந்துள்ளார். ஆனால், அவர் தற்போது திடீரென இறந்து விட்டதால், இயக்குனராக வேண்டும் என்ற புனித் ராஜ்குமாரின் ஆசை நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Similar News