செய்திகள்
நடிகர் சூர்யா

ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது - நடிகர் சூர்யா வேண்டுகோள்

Published On 2019-09-14 21:17 IST   |   Update On 2019-09-14 21:17:00 IST
ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை:

குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ (23). கம்ப்யூட்டர் என்ஜினீயர். நேற்று முன்தினம் பணி முடிந்து பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அந்த இடத்திலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரசிகர்கள் எந்த ஊரிலும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ரசிகர்கள் எந்த ஊரிலும் பேனர்கள் வைக்கக் கூடாது என தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். பேனர்கள் வைப்பதற்கு ஆகும் செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்குங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News