செய்திகள்

தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - நானா படேகர் மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு

Published On 2018-10-06 16:58 GMT   |   Update On 2018-10-06 16:58 GMT
பாலிவுட் நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்த புகாரின் அடிப்படையில் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #TanushreeDutta #NanaPatekar
மும்பை :

சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகளை நடிகைகள் உரக்க பேச ஆரம்பித்து உள்ளனர். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி திரையுலகை கதிகலங்க வைத்தார். இப்போது தனுஸ்ரீதத்தாவும் பாலியல் ஆசாமிகளுக்கு எதிராக மல்லுக்கட்டி இருக்கிறார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

காலா படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மூன்று முறை தேசிய விருதை வென்றவர் இவர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

கடந்த 2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, தகாத இடங்களில் கை வைத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.

ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த நானா படேகரை நான் கண்டித்த போது, தனக்கு பிடித்ததை நான் செய்வேன் என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்று சத்தமாக கூறினார்.
நானா படேகரின் இந்த செயலுக்கு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் ஆகிய அனைவரும் ஆதரவாக செயல்பட்டனர் என அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் பாலிவுட் பிரபலங்கள் பலரும் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு அளித்தனர்.



இந்நிலையில், மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்திற்கு இன்று வந்த தனுஸ்ரீ தத்தா,  நடிகர் நான படேகர் மீது புகார் அளித்தார், மேலும் கனேஷ் ஆச்சார்யா என்பவர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் நானா படேகர் மற்றும் கனேஷ் ஆச்சார்யா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். #TanushreeDutta #NanaPatekar
Tags:    

Similar News