செய்திகள்
சாய்ரா பானுவுடன் திலீப் குமார்

இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2016-12-07 11:25 IST   |   Update On 2016-12-07 11:25:00 IST
இந்தி திரையுலகின் பழம்பெரும் கதாநாயகன் நடிகர் திலீப் குமார்(93) உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:

மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்தவர் திலீப் குமார். இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படத்தை தழுவி எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படம் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.

பாலிவுட் முன்னாள் கதாநாயகி சாய்ரா பானுவை திருமணம் செய்த திலீப் குமார், கடைசியாக 1998-ம் ஆண்டில் வெளியான ‘கிலா’ படத்தில் நடித்திருந்தார். 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் உள்ள வீட்டில் பூரண ஓய்வெடுத்து வந்த திலீப் குமாருக்கு திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

வரும் 11-ம் தேதி 94-வது பிறந்தநாள் காணும் திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலைப்பட எதுவும் இல்லை என்றும் அவரது மனைவி சாய்ரா பானு குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சினிமாத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பாபா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டிலும், மத்திய அரசின் மிகஉயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதினை கடந்த 2015-ம் ஆண்டும் திலீப் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News