செய்திகள்
ஹூன்டாய் சான்ட்ரோ ஃபேஸ்லிஃப்ட்: வெளியீடு மற்றும் முழு தகவல்கள்
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் தனது சான்ட்ரோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் சார்ந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் சான்ட்ரோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் சில நாடுகளில் AH2 என்ற பெயரில் சிறிய கார் ஒன்றை ஹூன்டாய் சோதனை செய்து வருகிறது. புதிய சான்ட்ரோ வெளியீட்டை தொடர்ந்து ஹூன்டாய் சிறிய காரினை ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.6300 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய ஹூன்டாய் திட்டமிட்டுள்ளது.
முதலீட்டின் முக்கிய அம்சங்களாக புதிய வாகனங்கள், புதிய இன்ஜின்களை உருவாக்குவது மற்றும் குர்கிராமில் அலுவலகம் திறப்பது போன்றவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை வெளியிட இருக்கும் ஒன்பது கார்களில் ஹூன்டாய் சான்ட்ரோ முதல் மாடலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடும்ப பயன்பாட்டிற்கென காம்பேக்ட் மாடலாக புதிய சான்ட்ரோ மாடல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களின் தொடர் அழுத்தம் காரணமாக சான்ட்ரோ பெயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது. சான்ட்ரோ பிரான்டை திரும்ப கொண்டு வருவது பெரும் நெருக்கடி சூழலை ஏற்படுத்தி உள்ளது என ஹூன்டாய் மோட்டார் நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஹூன்டாய் சான்ட்ரோ தற்போதைய ஹூன்டாய் i10 மாடலை விட உயரமாகவும், அகலமாகவும் இருக்கும் என்றும் இந்த காரில் பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின் ஆப்ஷன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 சான்ட்ரோ மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.