செய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2018-01-19 17:03 IST   |   Update On 2018-01-19 17:03:00 IST
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் BS-VI ரக ஃபிளாக்ஷிப் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
புதுடெல்லி:

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் BS-VI ரக மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக உருவாகி இருக்கும் எஸ்-கிளாஸ் இந்தியாவில் BS-VI ரகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 

2016-ம் ஆண்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் BS-VI ரக வாகனங்களை தயாரிக்கும் முடிவை அறிவித்த கடந்த ஆண்டு வாகனத்தின் வெளியீட்டை உறுதி செய்திருந்த நிலையில், புதிய ஃபிளாக்ஷிப் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய BS-VI ரக மாடல் தற்சமயம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் BS-IV ரக வாகனங்களின் எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் என மெர்சிடிஸ் அறிவித்திருக்கிறது. புதிய BS-VI டீசல் இன்ஜின் முந்தைய BS-IV இன்ஜின்களை விட 82% வரை குறைவான PM அளவு கொண்டிருக்கிறது. 

பெட்ரோல் மற்றும் டீசல் எமிஷன்களிடையே இருக்கும் இடைவெளியை குறைக்க NOx எமிஷன்கள் 68% வரை குறைக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ்-350d மாடல் இவ்வாறான தொழில்நுட்பம் மற்ரும் இன்ஜின் கொண்டிருக்கும் முதல் கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

புதிய 6-சிலிண்டர் இன்ஜினில் ஸ்டெப்டு பவுள் கம்பஷன் வழிமுறையை பெற்றிருக்கிறது. இதனால் இரண்டடுக்கு டர்போசார்ஜிங் மற்றும் CAMTRONIC வேரியபிள் வால்வ் லிஃப்ட் கண்ட்ரோல் பயன்படுத்துகிறது. இந்த வடிவமைப்பு அலுமினியம் இன்ஜின் பிளாக், ஸ்டீல் பிஸ்டன் மற்றும் சிலிண்டர் வால்களில் நானோஸ்லைடு கோட்டிங் பெற்றிருக்கிறது. இதனால் உராய்வு குறைகிறது.

Similar News