செய்திகள்

இந்தியாவில் ஹோன்டா கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

Published On 2017-09-15 16:50 IST   |   Update On 2017-09-15 16:50:00 IST
ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களின் விலை மாற்றப்படுகிறது. ஜி.எஸ்.டி. செஸ் கட்டணங்கள் மாற்றப்படுவதால் பிரீமியம் மாடல்களின் விலை உயர்த்தப்படுகிறது.
புதுடெல்லி:

ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பிரீமியம் வாகனங்களுக்கான விலை உயர்த்தப்படுகிறது. சிட்டி செடான், எஸ்.யு.வி., பி.ஆர்.-வி., சி.ஆர்.-வி உள்ளிட்ட மாடல்களின் விலையில் ரூ.7003 முதல் ரூ.89,069 வரை அதிகரிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொண்ட சமீபத்திய ஜி.எஸ்.டி. செஸ் கட்டணத்தை மாற்றியமைத்ததே விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

பிரீமியம் மாடல்களுக்கான ஜி.எஸ்.டி.கட்டணங்களை 2 முதல் 7 சதவிகிதம் வரை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. இதனால் நடுத்தர மாடல்கள் முதல் எஸ்.யு.வி மாடல்களின் விலை செப்டம்பர் 11, 2017 முதல் அதிகரிக்க இருக்கிறது. எனினும் ஹோன்டா நிறுவனம் ப்ரியோ, அமேஸ் மற்றும் WR-V மாடல்களின் விலை மாற்றப்படவில்லை.

ஹோன்டா சிட்டி விலை ரூ.7,003 முதல் ரூ. 18,791 வரை வெவ்வேறு மாடல்களுக்கும் அதிகரிக்கப்படுகிறது. ஹோன்டா பி.ஆர்.-வி மாடலின் விலை ரூ.12,490 முதல் ரூ.18,242 வரை அதிகரிக்கிறது. ஹோன்டா சி.ஆர்.-வி விலை ரூ.75,034 முதல் ரூ.89,069 வரை உயர்த்தப்படுகிறது.  



இந்தியாவில் ஜி.எஸ்.டி. எனும் புதிய வரிமுறை ஜூலை 1, 2017 முதல் அமலானது. இதனால் ஆடம்பர கார்கள் முதல் எஸ்.யு.வி. மாடல்களின் விலை குறைந்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் இவ்வகையான வாகனங்களின் ஜி,எஸ்.டி. செஸ் மாற்றியமைக்க திட்டமிட்டு, செப்டம்பர் 11-ம் தேதி முதல் அமலாகிறது.

மாற்றியமைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. நடுத்தர மாடல் கார்களுக்கு 45 சதவிகிதமாகவும், பெரிய கார்களில் 48 சதவிகிதம் மற்றும் 4 மீட்டர் மற்றும் 170 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவை மிஞ்சும் மாடல்களுக்கு 50 சதவிகிதம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறிய ரக பெட்ரோல் மற்ரும் டீசல் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. செஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோன்டா நிறுவனம் மட்டுமின்றி டொயோட்டா நிறுவனமும் தனது மாடல்களின் விலை உயர்வை சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News