சரிவுடன் முடிவடைந்தது இன்றைய பங்குச் சந்தை..!
- சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
- நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ் 200.15 புள்ளிகள், நிஃப்டி 42.30 புள்ளிகள் சரிவுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 82,530.74 புள்ளியாக இருந்தது. இன்று காலை 82,392.63 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்று குறைந்த பட்சமாக 82,146.95 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82,514.81 புள்ளிகளிலும வர்த்தகமானது. இறுதியாக 200.15 புள்ளிகள் சரிந்து 82,330.59 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 25,062.10 புள்ளியாக இருந்தது. இன்று காலை 25,064.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,953.05 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 25,070.00 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 42.30 புள்ளிகள் சரிந்து 25,019.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
பாரதி ஏர்டெல் நிறுவன பங்கு இன்று 2.81 சதவீதம் சரிவை சந்தித்தது.
ஹெச்.சி.எல். டெக், எஸ்பிஐ, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பின்சர்வ், எல் அண்டு டி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டைட்டன் நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன.
இந்துஸ்தான் யுனிலிவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டாட்டா மோட்டார்ஸ், என்.டி.பி.சி. நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
ஆசிய மார்க்கெட்டுகளில் ஜப்பானின் Nikkei 225 index, ஷாங்காயின் SSE Composite index, ஹாங் காங்கின் Hang Seng பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன. தென்கொரியாவின் Kospi, ஐரேப்பிய பங்குசு் சந்தைகள், அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.
நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,200.18 புள்ளிகள் உயர்ந்து கடந்த ஏழு மாதங்களில் இல்லாத வகையில் 82,530.74 புள்ளிகளை தொட்டது. அதேபோல் நிஃப்டி 395.20 புள்ளிகள் உயர்ந்து 25,062.10 புள்ளிகளை தொட்டது.