செய்திகள்
அன்புமணி

திமுக ஆட்சிக்கு வந்தால் போலி கூட்டுறவு சங்கங்கள் உருவாகும்- அன்புமணி பேச்சு

Published On 2021-03-21 13:03 GMT   |   Update On 2021-03-21 13:03 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பூக்கடை சத்திரத்தில் காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் மகேஷ் குமார் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், இந்த தேர்தல் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நடக்கும் தேர்தல். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு நடைபெறும்.

போலி கூட்டுறவு சங்கங்கள் உருவாகும். அதன் மூலம் கொள்ளை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News