ஐ.பி.எல்.(IPL)
நெல்லை மாநகர போலீஸ் கூடுதல் துணை கமி‌ஷனர் வெள்ளத்துரை இடமாற்றம்

நெல்லை மாநகர போலீஸ் கூடுதல் துணை கமி‌ஷனர் வெள்ளத்துரை இடமாற்றம்

Published On 2021-03-18 14:18 IST   |   Update On 2021-03-18 14:34:00 IST
தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை டி.ஜி.பி. அறிவுறுத்தலின் பேரில், கூடுதல் துணை கமி‌ஷனர் வெள்ளத்துரை உடனடியாக சென்னை தலைமை காவல் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
நெல்லை:

நெல்லை மாநகர குற்ற ஆவண காப்பகத்தில் கூடுதல் துணை கமி‌ஷனராக பணியாற்றி வருபவர் வெள்ளத்துரை. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு ஆகும்.

இவர் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்கும் சிறப்பு தனிப்படையில் பணியாற்றி பாராட்டு பெற்றவர். மேலும் இதற்காக இரட்டை பதவி உயர்வும் வெள்ளத்துரைக்கு வழங்கப்பட்டது.

இவரது மனைவி ராணி ரஞ்சிதம். இவர் வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நெல்லை மாநகர கமி‌ஷனர் அன்பு இதுகுறித்து விசாரணை நடத்தி தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை டி.ஜி.பி. அறிவுறுத்தலின் பேரில், கூடுதல் துணை கமி‌ஷனர் வெள்ளத்துரையை உடனடியாக சென்னை தலைமை காவல் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவர் மாற்றப்பட்ட தகவலை நெல்லை மாநகர கமி‌ஷனர் அன்பு உறுதி செய்துள்ளார்.

Similar News