ஐ.பி.எல்.(IPL)
முக ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தபின் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்- முக ஸ்டாலின்

Published On 2021-03-18 11:39 IST   |   Update On 2021-03-18 11:39:00 IST
திருவாரூரில் 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்றேன் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

* திருவாரூரில் 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்றேன்.

* மாணவனாக இருந்தபோது மாணவர்களை ஒன்று திரட்டி இந்திக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினேன்.

* திமுக ஆட்சிக்கு வந்தபின் விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

* நிறைவேற்ற முடியும் என்ற வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளன.

* பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, பால் லிட்டருக்கு ரூ. 4 குறைக்கப்படும்.

* ஆவின் பால் விலையை குறைப்போம் என்றார்கள்; ஆனால் செய்யவில்லை.

* கேபிள் கட்டணத்தை குறைத்ததா அதிமுக அரசு?

இவ்வாறு அவர் கூறினார்.


Similar News