செய்திகள்
காவிரி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்- ஜவாஹிருல்லா
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
கீழ்வேளூர்:
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிபோடுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
உடனடியாக தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிபோடுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
உடனடியாக தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews