செய்திகள்

பொது மேடையில் என்னை அடிக்கடி பார்க்கலாம்: உதயநிதி ஸ்டாலின்

Published On 2018-01-27 12:44 IST   |   Update On 2018-01-27 12:44:00 IST
இனி என்னை பொதுமேடையில் அடிக்கடி பார்க்கலாம் என தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார். #BusFareHike
தாம்பரம்:

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

கீழே நின்ற அவரை மேடையில் ஏறுமாறு தொண்டர்கள் கூறினர். இதனால் அவர் மேடையில் ஏறி தொண்டர்களை பார்த்து கையசைத்து, “இனி என்னை அடிக்கடி மேடையில் பார்க்கலாம்” என்று கூறினார்.

அதன்பின் கீழே இறங்கி தொண்டர்களுடன் நின்று கோ‌ஷங்கள் எழுப்பினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பஸ் கட்டண உயர்வை கண்டித்து நடக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இனிமேல் தி.மு.க. நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பேன். தமிழக அரசு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை” என்றார். #Tamilnews #BusFareHike

Similar News