கமல்ஹாசன் சினிமாவில் நடித்து கஜானாவை நிரப்பியவர்: தமிழிசை சவுந்தரராஜன்
ஆலந்தூர்:
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் கூறி இருப்பதாவது:-
பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த பஸ் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அரசு திரும்ப பெற வேண்டும்.
போக்குவரத்து துறையே ஊழலால் நிறைந்து இருக்கிறது அதை லாபகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜனதா எப்போதும் தமிழ்நாட்டு மக்களுடன் இருக்கிறது. மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.
தற்போது பலபேர் மாற்றத்தை கொண்டுவரப் போவதாக கிளம்பி உள்ளனர். சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். கஜானா குறிக்கோள் இல்லை என்று சொல்லும் ஒருவர் (கமல்) தான் வாழ்நாளில் பாதிநாட்கள் சினிமாவில் நடித்து கஜானாவை நிரப்பி உள்ளார்.
இனி தமிழகம் பரிசோதனை களமாக இருக்காது. திராவிட கட்சிகள் ஊழலால் நிரம்பி இருக்கிறது. பா.ஜனதாவால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews