செய்திகள்
எடப்பாடி பழனிச்சாமி அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: அமைச்சர்கள் ஆவேச பேச்சு
வருகிற 4 ஆண்டுகளும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். எந்த கொம்பனாலும் இதை அசைக்க முடியாது என்று கடலூரில் அமைச்சர்கள் ஆவேசமாக பேசினார்கள்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற 16-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மஞ்சக் குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்:-
கடலூர் மாவட்டம் என்றும் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது புயல்-மழை போன்ற பாதிப்புகளின் போது கடலூர் மாவட்டத்துக்கு தனிக்கவனம் செலுத்தி இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தார்.
மக்கள் என்றும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே அ.தி.மு.க.வை எவராலும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, கருணாநிதியிடம் போராடி அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று வரை இந்த கட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனை பார்க்கும்போது தர்மம்தான் வென்று வருகிறது என்பது எடுத்துக் காட்டாகும். ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பலர் நினைத்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் ஒழிக்க முடியாது.
அ.தி.மு.க.வில் 134 எம்.எல்.ஏ.க் களும், 50 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த 50 எம்.பி.க்கள் மூலமாகதான் மோடியிடமும், பாராளு மன்றத்திலும் நம்மால் பேச முடிகிறது. இதுதான் நம் இயக்கத்தின் சக்தியாகும்.
வருகிற 4 ஆண்டுகளும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். எந்த கொம்பனாலும் இதை அசைக்க முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பற்றி பொதுமக்களிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்து கூற வேண்டும். எப்போதும் நீங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எப்போதும் நீங்கள் தயாராகத்தான் உள்ளீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி வரை அ.தி.மு.க.தான் ஆளுங்கட்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும்போது, “இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளார்கள். இந்த ஆர்வம் இருப்பதால்தான் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியவில்லை. அழிக்கவும் முடியாது. அ.தி.மு.க.வை எதிர்ப்பது எதிர்க்கட்சிக்கு சவாலாக உள்ளது” என்றார்.
இன்று நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தி லும் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச் செல்வன் ஆகியோரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற 16-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மஞ்சக் குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்:-
கடலூர் மாவட்டம் என்றும் அ.தி.மு.க.வின் கோட்டையாகும். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது புயல்-மழை போன்ற பாதிப்புகளின் போது கடலூர் மாவட்டத்துக்கு தனிக்கவனம் செலுத்தி இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தார்.
மக்கள் என்றும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே அ.தி.மு.க.வை எவராலும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, கருணாநிதியிடம் போராடி அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று வரை இந்த கட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனை பார்க்கும்போது தர்மம்தான் வென்று வருகிறது என்பது எடுத்துக் காட்டாகும். ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பலர் நினைத்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் ஒழிக்க முடியாது.
அ.தி.மு.க.வில் 134 எம்.எல்.ஏ.க் களும், 50 எம்.பி.க்களும் உள்ளனர். இந்த 50 எம்.பி.க்கள் மூலமாகதான் மோடியிடமும், பாராளு மன்றத்திலும் நம்மால் பேச முடிகிறது. இதுதான் நம் இயக்கத்தின் சக்தியாகும்.
வருகிற 4 ஆண்டுகளும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். எந்த கொம்பனாலும் இதை அசைக்க முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பற்றி பொதுமக்களிடம் கட்சி நிர்வாகிகள் எடுத்து கூற வேண்டும். எப்போதும் நீங்கள் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எப்போதும் நீங்கள் தயாராகத்தான் உள்ளீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி வரை அ.தி.மு.க.தான் ஆளுங்கட்சியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும்போது, “இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளார்கள். இந்த ஆர்வம் இருப்பதால்தான் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியவில்லை. அழிக்கவும் முடியாது. அ.தி.மு.க.வை எதிர்ப்பது எதிர்க்கட்சிக்கு சவாலாக உள்ளது” என்றார்.
இன்று நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தி லும் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், கலைச் செல்வன் ஆகியோரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.