செய்திகள்
ஜி.எஸ்.டி. வரி அமல் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல்: தம்பிதுரை
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியதன் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவல்துறை டி.ஜி.பி. பணி நீட்டிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து இருக் கிறார். எதிர்க்கட்சி என்ற முறையில் சிலர் அரசியல் செய்வார்கள். எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார். அது நடக்கப் போவதில்லை. அது அவருக்கே தெரியும்.
அ.தி.மு.க. பற்றி தலைமை இல்லாத கட்சி, ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை குடும்ப அரசியல் கிடையாது. தி.மு.க. குடும்ப அரசியலை பின்பற்றுகிறது.
அப்பா தலைவர், மு.க. ஸ்டாலின் செயல் தலைவர், அப்பா- முதல்-அமைச்சர், மகன்- துணை முதல்-அமைச்சர்.
தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியல் முதல்வர் கிடையாது. எடப்பாடி பழனிசாமி அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் விருப்பத்தின்படி ஆட்சி செய்து பாராட்டையும் பெற்று இருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சட்டசபை தேர்தல் வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சட்டசபை தேர்தல் 5 ஆண்டுக்கு பிறகு தான் வரும். அதுதான் சட்டம். அ.தி.மு.க. ஒரு ஜனநாயக கட்சி. அதில் யாருடைய தலையீடும் கிடையாது.
அமைச்சர்களுக்கு இது ஜெயலலிதா ஆட்சி, எம்.ஜி.ஆர். வளர்த்த இயக்கம் என்று நன்றாக தெரியும். அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை சொல்ல அமைச்சர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியதன் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது. தமிழ் நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தொழிற்சாலைக்கான வரிகள் இருக்கிறது.
தற்போது ஒரே நாடு, ஒரே வரி என்பதால் மாநிலத்தில் உள்ள நிதி நிலைமை குறைந்துள்ளது. அதுகுறித்து மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளோம். 5 ஆண்டுகளுக்கும் நிதி நிலையை சரி செய்வதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
ஜி.எஸ்.டி. வரியால் எந்த பாதிப்பு இருந்தாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அதை மத்திய அரசுக்கு எடுத்து செல்வார்கள். ஏழை, சாதாரண மக்களுக்குத்தான் அ.தி.மு.க.
ஜனாதிபதி தேர்தல் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் முதல்வரிடம் ஆதரவு கோரினார். அதன் அடிப்படையில் தலைமை கழகம் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவல்துறை டி.ஜி.பி. பணி நீட்டிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து இருக் கிறார். எதிர்க்கட்சி என்ற முறையில் சிலர் அரசியல் செய்வார்கள். எப்படியாவது முதல்வராக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார். அது நடக்கப் போவதில்லை. அது அவருக்கே தெரியும்.
அ.தி.மு.க. பற்றி தலைமை இல்லாத கட்சி, ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை குடும்ப அரசியல் கிடையாது. தி.மு.க. குடும்ப அரசியலை பின்பற்றுகிறது.
அப்பா தலைவர், மு.க. ஸ்டாலின் செயல் தலைவர், அப்பா- முதல்-அமைச்சர், மகன்- துணை முதல்-அமைச்சர்.
தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியல் முதல்வர் கிடையாது. எடப்பாடி பழனிசாமி அரசு மிக சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் விருப்பத்தின்படி ஆட்சி செய்து பாராட்டையும் பெற்று இருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு சட்டசபை தேர்தல் வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சட்டசபை தேர்தல் 5 ஆண்டுக்கு பிறகு தான் வரும். அதுதான் சட்டம். அ.தி.மு.க. ஒரு ஜனநாயக கட்சி. அதில் யாருடைய தலையீடும் கிடையாது.
அமைச்சர்களுக்கு இது ஜெயலலிதா ஆட்சி, எம்.ஜி.ஆர். வளர்த்த இயக்கம் என்று நன்றாக தெரியும். அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை சொல்ல அமைச்சர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.
ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியதன் மூலம் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது. தமிழ் நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தொழிற்சாலைக்கான வரிகள் இருக்கிறது.
தற்போது ஒரே நாடு, ஒரே வரி என்பதால் மாநிலத்தில் உள்ள நிதி நிலைமை குறைந்துள்ளது. அதுகுறித்து மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளோம். 5 ஆண்டுகளுக்கும் நிதி நிலையை சரி செய்வதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
ஜி.எஸ்.டி. வரியால் எந்த பாதிப்பு இருந்தாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அதை மத்திய அரசுக்கு எடுத்து செல்வார்கள். ஏழை, சாதாரண மக்களுக்குத்தான் அ.தி.மு.க.
ஜனாதிபதி தேர்தல் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் முதல்வரிடம் ஆதரவு கோரினார். அதன் அடிப்படையில் தலைமை கழகம் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.