செய்திகள்

தலைமை செயலகத்தில் நடந்த வருமானவரி சோதனை பற்றி அரசு பதில் சொல்லவேண்டும்: கனிமொழி பேட்டி

Published On 2016-12-26 12:23 IST   |   Update On 2016-12-26 15:52:00 IST
தலைமை செயலகத்தில் நடந்த வருமானவரி சோதனை பற்றி அரசு பதில் சொல்லவேண்டும் என்று தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டில் நலமாக இருக்கிறார். டாக்டர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.

கட்சியில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆவாரா? என்று கேட்கிறீர்கள். இதற்கு பொறுத்திருங்கள் என்று அவரே பதில் அளித்து இருக்கிறார். எனவே பொதுக்குழு கூடிய பின்பு அதுபற்றி தெரியவரும்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி மதுரை அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீடு, தலைமை செயலகம் உள்பட பல இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

எனவே தொடர்ந்து வருமான வரி சோதனை நடந்து வருவதற்கு தமிழக அரசு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். அரசு அதற்கு கடமைப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News