செய்திகள்
புதுவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்–அ.தி.மு.க. கூட்டணி இல்லை: ஆளும் கட்சி மீது கடும் விமர்சனம்
புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் அரசை கடுமையாக கண்ணன் விமர்சித்து இருப்பதால் இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்– அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்–17 இடங்களிலும், அ.தி.மு.க.–12 இடங்களிலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
இதில் என்.ஆர்.காங்கிரஸ்–15 இடங்களிலும், அ.தி.மு.க.–5 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது தங்கள் அணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்து இருந்தனர். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வை சேர்ந்துக் கொள்ளாமல் சுயேச்சை ஆதரவுடன் தனித்து ஆட்சியை அமைத்தது.
இதனால் என்.ஆர்.காங்கிரஸ் மீது அ.தி.மு.க. கடும் கோபத்தில் இருந்தது. ரங்கசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
இதன் பிறகு இருகட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் புதுவையில் ஒரு இடத்துக்கான டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தல் நடந்தது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் எம்.பி. சீட்டை ரங்கசாமி, அ.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக அறிவித்தார். இதனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோகுல கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் காரணமாக இருகட்சிகளுக்கும் இடையே மீண்டும் சுமூக உறவு ஏற்பட்டது. இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்தன.
இரு கட்சிகளை சேர்ந்த 2–ம் நிலையில் உள்ள தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி முடிவு எடுப்பதற்கு காலதாமதம் செய்து வந்தார். மேலும் அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்ட நிபந்தனைகளையும் ஏற்க தயக்கம் காட்டினார்.
கடந்த 4–ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் புதுவையில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வில் இருந்து உரிய சிக்னல் வரவில்லை. எனவே இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி வருமா? இல்லையா? என்பது பற்றி சந்தேகம் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று புதுவை அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்கள். மாநில அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் கண்ணன், என்.ஆர். காங்கிரஸ் அரசையும், முதல்–அமைச்சர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. ரவுடி ராஜ்ஜியமாக புதுவை மாறிவிட்டது. ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. இந்த ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்று பேசினார்.
கடந்த காலங்களில் என்.ஆர்.காங்கிரஸ் அரசை அ.தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் நிலை வந்ததையடுத்து அ.தி.மு.க.வினர் எந்த விமர்சனமும் செய்யாமல் மவுனம் காத்து வந்தனர்.
நேற்றைய பிரசாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் அரசை கடுமையாக கண்ணன் விமர்சித்து இருப்பதால் இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படாததால் என்.ஆர்.காங்கிரசாரும் தனித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.
புதுவையில் கடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்– அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்–17 இடங்களிலும், அ.தி.மு.க.–12 இடங்களிலும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
இதில் என்.ஆர்.காங்கிரஸ்–15 இடங்களிலும், அ.தி.மு.க.–5 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது தங்கள் அணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்து இருந்தனர். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வை சேர்ந்துக் கொள்ளாமல் சுயேச்சை ஆதரவுடன் தனித்து ஆட்சியை அமைத்தது.
இதனால் என்.ஆர்.காங்கிரஸ் மீது அ.தி.மு.க. கடும் கோபத்தில் இருந்தது. ரங்கசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
இதன் பிறகு இருகட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் புதுவையில் ஒரு இடத்துக்கான டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தல் நடந்தது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் எம்.பி. சீட்டை ரங்கசாமி, அ.தி.மு.க.வுக்கு ஒதுக்குவதாக அறிவித்தார். இதனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோகுல கிருஷ்ணன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் காரணமாக இருகட்சிகளுக்கும் இடையே மீண்டும் சுமூக உறவு ஏற்பட்டது. இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்தன.
இரு கட்சிகளை சேர்ந்த 2–ம் நிலையில் உள்ள தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி முடிவு எடுப்பதற்கு காலதாமதம் செய்து வந்தார். மேலும் அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்ட நிபந்தனைகளையும் ஏற்க தயக்கம் காட்டினார்.
கடந்த 4–ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் புதுவையில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் கூட்டணி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணியில் சேர என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வில் இருந்து உரிய சிக்னல் வரவில்லை. எனவே இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி வருமா? இல்லையா? என்பது பற்றி சந்தேகம் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று புதுவை அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்கள். மாநில அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் கண்ணன், என்.ஆர். காங்கிரஸ் அரசையும், முதல்–அமைச்சர் ரங்கசாமியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. ரவுடி ராஜ்ஜியமாக புதுவை மாறிவிட்டது. ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. இந்த ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்று பேசினார்.
கடந்த காலங்களில் என்.ஆர்.காங்கிரஸ் அரசை அ.தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் நிலை வந்ததையடுத்து அ.தி.மு.க.வினர் எந்த விமர்சனமும் செய்யாமல் மவுனம் காத்து வந்தனர்.
நேற்றைய பிரசாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் அரசை கடுமையாக கண்ணன் விமர்சித்து இருப்பதால் இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படாததால் என்.ஆர்.காங்கிரசாரும் தனித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர்.