கர்நாடகா தேர்தல்

மடிக்கணினி கொள்முதல் - டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம்

Published On 2025-05-23 11:45 IST   |   Update On 2025-05-23 12:42:00 IST
  • 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.
  • 2025 - 26 நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு வழங்க, மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது.

தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

கல்வியையும் டிஜிட்டல் பின்னணியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக 2011 செப்டம்பர் 15 அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விலையில்லா மடிக்கணினி திட்டம் என்ற உன்னத திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்த திட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் சிறிய மாற்றங்களுடன் இலவச லேப்டாப் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியது.

2025-2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில் 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம். 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி.எஸ்.எஸ்.டி. கொண்ட ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் திரை ஆகிய செயல் திறன் கொண்ட வகையில் இந்த மடிக் கணினி இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags:    

Similar News