லைஃப்ஸ்டைல்
மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விக்கலாம்

மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விக்கலாம்

Published On 2021-10-29 04:20 GMT   |   Update On 2021-10-29 06:27 GMT
வாழ்வில் பெரிய வெற்றிகள் தரும் சந்தோஷத்தை விட மனதுக்கு பிடித்த சின்ன விஷயங்களை செய்யும் போதோ, சிறு வெற்றிகள் கிடைக்கும் போதோ ஏற்படும் சந்தோஷமே மன மகிழ்ச்சியின் உச்சம் பெறுகிறது.
வாழ்க்கையை நல்ல முறையில் வழிநடத்தி செல்வது மகிழ்ச்சியான உணர்வுகள் தான். எண்ணங்கள் வார்த்தைகள், செயல்கள் என நாம் செய்யும் எந்தவொரு விஷயமும் மற்றவரை பாதிக்காமல் இருந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்பை கொடுத்து அன்பை பெறுகையில் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும். தன்னலாம் கருதாத அன்பு, மகிழ்ச்சியின் அளவைக்கூட்டும், இன்பத்தை அளிக்கும்.

மகிழ்ச்சி என்பது நமக்குள் இருக்கும் உணர்வு. அதை வெளியில் இருந்து பெற முடியாது. காலை எழும்போது நம்மை நாமே கண்ணாடியில் பார்த்து புன்னகைப்பதில் தொடங்கி, முகம் தெரியாக நபருக்கோ, வாயில்லாத ஜீவனுக்கோ உதவுதல், பறவைகளின் இசை, காற்றில் அசையும் மரம் என நம்மை சுற்றியிருக்கும் அனைத்தையும் ரசிப்பது, நமக்கு பிடித்த செயல்களில் ஈடுபடுவது வரை அனைத்துமே மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழிவகுக்கும்.

உறவுகளுக்கு, குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு இடையில் அன்பை பகிரவும், மகிழ்ச்சியை உண்டாக்கவும் பணம் செலவழிக்க தேவையில்லை. சிறிது நேரத்தை செலவழித்தால் போதுமானது. மகிழ்ச்சியான மனநிலை நமக்குள் புத்துணர்வை உண்டாக்கும். அந்த புத்துணர்வு நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் பரவும்.

வாழ்வில் பெரிய வெற்றிகள் தரும் சந்தோஷத்தை விட மனதுக்கு பிடித்த சின்ன விஷயங்களை செய்யும் போதோ, சிறு வெற்றிகள் கிடைக்கும் போதோ ஏற்படும் சந்தோஷமே மன மகிழ்ச்சியின் உச்சம் பெறுகிறது.
Tags:    

Similar News