லைஃப்ஸ்டைல்
பெண்களின் சமையலறை பழக்கவழக்கம்... எரிபொருள் சிக்கனம்...

பெண்களின் சமையலறை பழக்கவழக்கம்... எரிபொருள் சிக்கனம்...

Published On 2020-09-25 02:15 GMT   |   Update On 2020-09-25 02:15 GMT
பெண்கள் சமையல் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பது எரிபொருளை சேமிக்க உதவும். அதற்கான சில குறிப்புகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.
ஊரடங்கு காலகட்டம் குடும்பத்தலைவிகளை ஓய்வில்லாமல் சமையல் பணியில் ஈடுபட வைத்துவிட்டது. அதன் காரணமாக கியாஸ் சிலிண்டர்களின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இரண்டு மாதங்களை தாண்டியும் கியாஸ் சிலிண்டர் காலியாகாமல் சமைத்துக்கொண்டிருந்தவர்கள் ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே அடுத்த கியாஸ் சிலிண்டரை தயாராக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. சமையல் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை கடைப்பிடிப்பது எரிபொருளை சேமிக்க உதவும். அதற்கான சில குறிப்புகள்:

சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளிவரும் தீச்சுடர் பாத்திரத்தின் அடிப்பகுதியில் மட்டும்தான் பரவ வேண்டும். பாத்திரத்தின் நான்கு பக்கங்களின் விளிம்புகளிலும் தீச் சுடர் பரவி மேல் நோக்கி எரியக் கூடாது. அது கியாஸ் விரைவாக காலியாவதற்கு வழிவகுக்கும். அத்து டன் அதிக வெப்பம் வெளியாகி சமையலுக்கும் இடையூறை ஏற்படுத் தும்.

பர்னரில் இருந்து வெளிப்படும் தீச்சுடர் நீல நிறத்தில் எரிவதுதான் நல்லது. தொடர்ந்து சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் சுடர் வெளிப்பட்டால் அந்த கியாஸ் சமையலுக்கு முழுமை யாக உதவாது. கியாஸ் வீணாகுவதற் கான வாய்ப்பாக அமையும். பர்னரை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால் இத்தகைய அறிகுறிகள் வெளிப் படும்.

சமைப்பதற்கு தேவையான பொருட் களை தயாராக வைத்துவிட்டுத்தான் அடுப்பை ஆன் செய்ய வேண்டும். நறுக்கிய பொருட்கள், மசாலா பொருட்களை அருகில் எடுத்து வைத்துவிட்டு சமையலை தொடங்க வேண்டும். அப்படி செய்தால் தேவை யில்லாமல் எரிபொருள் வீணாவது தவிர்க்கப்படும்.

அடுப்பில் பாத்திரங்களை திறந்த நிலையில் வைத்துக்கொண்டு சமைப் பதை தவிர்ப்பது நல்லது. திறந் திருக்கும் பாத்திரங்களில் இருந்து வெப்பம் விரைவாக வெளியேறும். மூடிவைக்கும்போது வெப்பம் வெளி யேறாமல் நீராவி உருவாகி காய்கறி களை வேகமாக வேகவைக்க உதவும். சமைக்கும் நேரமும் குறையும். கியாஸும் மிச்சமாகும்.

தண்ணீரை கொதிக்கவைக்கும் போதும், சமைக்கும்போதும் எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணக்கிட வேண் டும். மறுமுறை சமைக்கும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சமையல் வேலையை முடிக்க இது உதவும். அதை கருத்தில் கொள்ளாமல் நீர் கொதித்து ஆவியாகிக் கொண்டிருந் தால் கியாஸ் வீணாகும்.

அடுப்பில் வைப்பதற்கு முன்பு பாத்திரங்கள் நன்றாக உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும். உள்பகுதியிலும், அடிப்பகுதியில் நீர்த்துளிகளை கொண்ட பாத்திரங்கள் அதனை ஆவி யாக்குவதற்கு அதிக எரி பொருளை அபகரித்துவிடும்.

அடுப்பில் வைக்கும் பாத்திரம் நன்றாக சூடேறியதும் தீச்சுடரின் வீரியத்தை குறைத்துவிட வேண் டும். அதுபோல் கொதிக்க தொடங்கியதும் தீச்சுடரை குறைத்துவைத்துவிட வேண் டும். அதை விடுத்து தீச்சுடரை முழுமையாக எரியவிட்டு அதிக வெப்பநிலையில் சமைப்பது சமைக்கும் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் களை சிதைத்துவிடும்.

சாதத்தை வேகவைப்பதற்கு பாத்திரங்களை பயன்படுத்தலாம். மற்ற சமையல் வேலைகளுக்கு பிரஷர் குக்கரை உபயோகிக்கலாம். பாத்திரத் தில் திறந்த நிலையில் சமைப்பதுடன் ஒப்பிடும்போது குக்கரில் அழுத்தப் பட்ட நீராவி, உணவை வேகமாக சமைக்க உதவும். மேலும் உணவு நீண்ட நேரம் சூடாகவும் இருக்கும்.

அடிக்கடி சமைப்பது கியாஸ் விரயத்திற்கு வழிவகுக்கும். திட்ட மிட்டு சமையல் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும்.

சமையல் வேலை முடிந்ததும் சிலிண் டரை ஆப் செய்துவிட வேண்டும். பர்னர், சிலிண்டர் டியூப் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
Tags:    

Similar News