லைஃப்ஸ்டைல்
கர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்

கர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்

Published On 2021-01-18 04:31 GMT   |   Update On 2021-01-18 04:31 GMT
கர்ப்பகாலத்தில் வாயிலிருந்து வரக்கூடிய துர்நாற்றம் பொதுவானது. உடலில் உண்டாகும் மாற்றத்தால் இது நிகழ்கிறது. இதற்கு பொதுவான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.
கர்ப்பகால மசக்கையில் கர்ப்பிணிகள் வாந்தி எடுப்பது பொதுவானது. காலை நோய் மற்றூம் குமட்டலுடன் வாந்தியெடுத்தல் பிரச்சனையை கொண்டிருக்கிறார்கள். இதனால் வாந்தி எடுக்கும் போது அமில சூழல் உண்டாகிறது. இந்த நேரத்தில் புளிப்பு மிகுந்த அமிலம் வாயின்னுள் வருவதால் பல் அரிப்பு உண்டாகலாம்.

இது பற்களின் இடையில் நுழைந்து தேங்கி அதிக துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இதை தவிர்க்க வாந்தி எடுக்கும் போதெல்லாம் வாய் கொப்புளிப்பது அவசியம். இதன் மூலம் அமிலம் வெளியேற்றப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் வயிற்றீல் வளரும் கருவுக்கு கால்சியம் நிறைவாக கிடைக்க வேண்டும். இது தாயிடமிருந்துதான் பெறப்படுகீறது. கால்சியம் பற்றாக்குறை இருக்கும் கர்ப்பிணி போதுமான சத்தை குழந்தைக்கு வழங்காத போது வயிற்றில் வளரும் கருவுக்கு தேவையான கால்சியத்தை கர்ப்பிணியின் எலும்பு மற்றும் கால்சியம் இருக்கும் இடத்திலிருந்து உறிஞ்சுகொள்கிறது.

அப்போது தாயின் ரத்தம் மற்றும் எலும்புகள் பற்களிலிருந்து கால்சியம் வெளியேறூகிறது. இது பற்களை பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களுக்கு இடையில் துவாரங்கள் உண்டாவதும் சிதைவதும் பற்களின் துர்நாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.

கர்ப்பிணி பெண் அதிகமாக வாந்தி எடுப்பதால் உடலில் நீரிழப்பு உண்டாகிறது. மேலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துகுறையக்கூடும். அதனால் தான் கர்ப்பிணிகள் அதிகமாக நீர் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. நீர்ச்சத்து குறைபாடு இருக்கும் பொது வாயில் வறட்சி உண்டாகலாம்.

இது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரித்து வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் உணவுக்கு பிறகு சுத்தமான நீரில் வாய் கொப்புளிப்பதும் பற்களில் உள்ள உணவை வெளியேற்ற உதவும்.

கர்ப்பிணிகள் கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் உணவின் மீது வெறுப்பை கொண்டிருப்பார்கள் என்றாலும் அடிக்கடி வாந்தி எடுப்பது நீரிழப்பு போன்ற நேரங்களில் பசி உணர்வை அதிகரிப்பார்காள். அப்போது அதிகமாக சிற்றூண்டி வகைகளை தேடுவார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் அப்போது அவர்களது வாயிலிருந்து மேலும் துர்நாற்றம் வீசக்கூடும். அதிலும் மோசமான உணவு பழக்கங்கள்நிச்சயம் வாய் துர்நாற்றத்தை உண்டாக்க செய்யும்.

கர்ப்பிணிக்கு அதிக உமிழ்நீர் சுரப்பது போலவே சிலருக்கு உமிழ்நீர் சுரப்பு குறைவாக இருக்கும். இது வாயை உலர செய்து செரிமானத்தை தாமதப்படுத்தி துர்நாற்றத்தை உண்டாக்க கூடும். 

கர்ப்பகாலத்தில் மோசமான உணவுகள் போன்று சில ஆரோக்கியமான உணவுகளும் வலுவான மணம் கொண்டவை. இவையும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்க கூடும். குறிப்பாக பூண்டு, வெங்காயம் போன்றவை வலுவான மணம் கொண்டவை என்றாலும் இதை பச்சயாக அரை வேக்காட்டில் சாலட்டில் சேர்த்து சாப்பிடும் போது ஏற்கனவே இருகக் கூடிய வாய் துர்நாற்றத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்யும்.

இவை தவிர கெட்ட வாடையுடன் மூச்சு இருப்பது சுவாசக்குழாய்களில் நோய்த்தொற்றுகளுக்கான அறிகுறியாக இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை நோய்த்தொற்றுகள், நீரிழிவு, கல்லீரல், இரைப்பை, குடல் நோய்கள், நாளமில்லா சுரப்பி நோய்கள், வளர்சிதை மாற்ற கோளாறூகள் போன்றவை கூட கெட்ட வாடையோடு கூடிய மூச்சுக்கான காரணங்களாக இருக்கலாம்.

இயன்றவரை கர்ப்பகாலத்தில் உணவில் கவனம் செலுத்துவது போன்று வாய் சுகாதாரம், பல் சிதைவு, பல் அழற்சி , ஈறு அழற்சி போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுத்துவிடுவது நல்லது. கர்ப்பகாலத்தில் பல் சுத்தம் மிக மிக அவசியம்.
Tags:    

Similar News