அழகுக் குறிப்புகள்

வீட்டில் தர்பூசணி பேஷியல் செய்வது எப்படி?

Published On 2023-05-20 07:11 GMT   |   Update On 2023-05-20 07:11 GMT
  • கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது.
  • தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.

தர்பூசணிகள் ஆக்ஸிஜனேற்றி பண்புகள் மற்றும் வைட்டமின்களின் நன்மைகளால் நிரம்பியுள்ளன, அவை நம் சருமத்திற்கு நல்லது. நீங்கள் உங்கள் அன்றாட உணவில் தர்பூசணியைச் சேர்க்க வேண்டும், குறிப்பாக கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. அதன் அற்புதமான நன்மைகளுக்காக உங்கள் சருமத்திலும் இதைப் பயன்படுத்தலாம்.

தர்பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டையிடுகிறது. இது உங்கள் சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. உங்கள் முகத்தில் தர்பூசணி பழத்தை அப்ளை செய்வதால், சரும துளைகள் இறுக்கப்பட்டு, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பை குறைக்க உதவும். தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை அடிக்கடி செய்து வரலாம். தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.

எந்த பேஷியல் செய்தாலும் முதலில் உங்கள் முகத்தை சுத்தப்படுவது அவசியம். பின்னர் ஒரு பவுலில் சிறிது தர்பூசணி சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்து நன்கு கலந்து கொள்ளவும், இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஒரு பருத்தி பஞ்சு கொண்டு அப்ளை செய்யவும். இதை 5-10 நிமிடங்கள் வைத்து விட்டு உலர்ந்த பின்னர் கழுவவும்.

தர்பூசணி சாறு மற்றும் அரிசிப் பொடியைப் பயன்படுத்தி ஒரு ஸ்க்ரப் தயாரிக்கவும். உங்கள் முகத்தை சுமார் 3-5 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மெதுவாக ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்யவும். எனினும் இது உங்கள் சருமத்தை பாதிக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் பிரச்சனைகள் நீங்கி விடும்.

உங்கள் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீக்கிய பிறகு, அதை ஈரப்பதமாக்குவது முக்கியம். இதற்கு தர்பூசணி சாறு, தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து மசாஜ் கிரீம் தயாரிக்கவும். இந்த கிரீமை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இந்த மசாஜ் கிரீம் உங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், அழகான பிரகாசத்தை அளிக்கவும் உதவும்.

தர்பூசணி பேஸ் பேக் செய்ய ஒரு பாத்திரத்தில், சிறிது கடலை மாவு, பால் மற்றும் சிறிது தர்பூசணி சாறு எடுத்து ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு பிரஷை பயன்படுத்தி, உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் இந்த ஃபேஸ் பேக்கை தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும்.

இது முற்றிலும் இயற்கையானது என்பதால் பொதுவாக எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றாலும், சரும பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க உங்கள் முகத்தில் இதனை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் கையில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

Tags:    

Similar News