அழகுக் குறிப்புகள்
null

முகம் பளீச்சென்று இருக்க ஒரு ஸ்பூன் தேன் போதும்...!

Published On 2024-01-12 06:19 GMT   |   Update On 2024-01-12 06:20 GMT
  • பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள்.
  • தேன் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக்.

முக அழகை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொள்வதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது தற்போது அனைத்து தரப்பட்ட பெண்களிடம் மிகவும் பிரபலமாகி உள்ளது. அதோடு மட்டுமின்றி வீட்டிலேயே சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தியும் பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள். இதுபோன்ற மேற்கொள்பவர்களாக நீங்கள்? இனி எந்த சிரமமும் வேண்டாம் வீட்டில் உள்ள தேன் உள்ளிட்ட சில பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக்க முடியும் தெரியுமா?

ஆம் தேனில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பிரக்டோஸ், தாதுக்கள், அமிலங்கள் என முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தோடு சருமத்தையும் பாதுகாப்பதற்கு உதவியாக உள்ளது. தேனைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக் என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்…

தேவையான பொருட்கள்

மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்

காபி தூள்- ஒரு ஸ்பூன்

தேன் ஒரு ஸ்பூன்

கடலை மாவு- ஒரு ஸ்பூன்

பால்- 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள்தூள், காபி தூள், கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பால் மற்றும் தேன் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்துகொள்ள வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கை முகத்தை சுத்தம் செய்துவிட்டு பின்னர் முகத்தில் 10-ல் இருந்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவருவதன் மூலம் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருப்பதை நீங்களே உணருவீர்கள்.

Tags:    

Similar News