லைஃப்ஸ்டைல்
கடலை மாவு பேஸ் பேக்

வெயிலினால் ஏற்படும் சரும கருமையை போக்கும் கடலை மாவு பேஸ் பேக்

Published On 2020-05-02 06:25 GMT   |   Update On 2020-05-02 06:25 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு முறை போட்டு வந்தால் வெயிலினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை படிப்படியாக மறைந்து வெள்ளையாக மாறுவதை தாங்களே உணருவீர்கள்.
சாதாரணமாக நாம் வெயிலில் எங்காவது வெளியே சென்று வந்தாலே போதும் சருமம் மிகவும் கருமையாக மாறிவிடும், இதனால் சருமம் எண்ணெய் பசையுடன் காணப்படும் இந்த பிரச்சனை சரியாக இதை ட்ரை பண்ணுங்கள்.

அதாவது ஒரு சுத்தமான பவுலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேக் போல் தயார் செய்து கொள்ளவும்.

இவற்றை சருமத்தை நன்றாக கழுவிய பின், அப்ளை செய்யுங்கள் பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவற்றை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர வெயிலினால் ஏற்படும் முக கருமை நீங்கி, முகம் வெள்ளையாக மாற உதவி செய்யும்.

இதை வாரத்தில் இரண்டு முறை ட்ரை செய்து பாருங்கள் நிச்சயம் முகம் படிப்படியாக கருமை மறைந்து வெள்ளையாக  மாறுவதை தாங்களே உணருவீர்கள். இது முழுக்க முழுக்க இயற்கை அழகு குறிப்பு என்பதால் சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே தயக்கம் இல்லாமல் இந்த ஃபேஸ் போக்கினை ட்ரை செய்யலாம்.

Tags:    

Similar News