பெண்கள் உலகம்

பலாப்பழ தேங்காய்ப்பால் ஸ்மூர்த்தி

Published On 2019-03-26 12:06 IST   |   Update On 2019-03-26 12:06:00 IST
வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பலாப்பழம் - 10
தேங்காய்ப் பால் - 1 கப்
பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) - 1 ஸ்பூன்
தேன் - சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)



செய்முறை :

மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்த ஜூஸில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.

இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.

தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

சூப்பரான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூர்த்தி ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News