லைஃப்ஸ்டைல்

பன்னீர் கீர்

Published On 2018-12-26 05:45 GMT   |   Update On 2018-12-26 05:45 GMT
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பன்னீர் கீர் எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

துருவிய பன்னீர் - 1/2 கப்
சுண்டக்காய்ச்சிய பால் - 3/4 கப்
பால் - 1/2 லிட்டர்
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
பாதாம் பருப்பு -  தேவையான அளவு
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
குங்குமப்பூ - சிறிதளவு


செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீரை சேர்க்க வேண்டும். உடனே பாலையும் அதனுடன் சேர்க்கவும். 5-6 நிமிடங்கள் விடாமல் கிளறிக்கொண்டே கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுண்டக்காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3-4 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.

ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும். இதனுடன் உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும். நன்றாக கிளறி அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.



நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை, குங்குமப்பூ அதன்மேல் தூவி அலங்கரிக்கவும். கொஞ்சம் குளிர வைத்து பரிமாறவும்.  சுவையான நாவிற்கு விருந்தளிக்கும் பன்னீர் கீர் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News