லைஃப்ஸ்டைல்

சப்பாத்திக்கு அருமையான பன்னீர் பொடிமாஸ்

Published On 2018-07-18 09:41 GMT   |   Update On 2018-07-18 09:41 GMT
சப்பாத்தி, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பன்னீர் பொடிமாஸ். இன்று இந்த பொடிமாஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பன்னீர் - 200 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 2 பல்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை

பன்னீரை உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

பூண்டை நசுக்கி கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கிய பின்னர் நசுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல் உப்பு சேர்க்கவும்.

பிறகு, அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீர், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சூப்பரான பன்னீர் பொடிமாஸ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News