லைஃப்ஸ்டைல்

சூப்பரான பச்சை பட்டாணி கீர்

Published On 2018-06-25 06:26 GMT   |   Update On 2018-06-25 06:26 GMT
பச்சை பட்டாணியில் கீர் என பலர் வியப்பது தெரிகிறது. இன்று இந்த பச்சை பட்டாணியில் சுவையான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பச்சைப்பட்டாணி - 1 கப்,
பச்சைப்பட்டாணி வேக வைக்க தண்ணீர் - 1 கப்,
உப்பு - கொஞ்சம்,  
பால் - அரை கப்.

கீர் தயார் செய்ய

பால் - 2 கப்,
சர்க்கரை - ¾கப் ,
பிஸ்தா - தேவையான அளவு,
பாதாம் - தேவையான அளவு,
குங்குமப்பூ - சிறிதளவு,
ஏலக்காய் தூள் - கொஞ்சம்



செய்முறை

வேக வைத்த பட்டாணியை ஆறவைத்து பின் அதனை கொஞ்சம் பால் விட்டு நல்ல கூழாக அரைத்து கொள்ளவும்.

பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு மசித்த பட்டாணி கூழை போட்டு நன்கு கிளறவும்.

இந்த கலவை கட்டியானவுடன் 2 கப் பாலில் முதலில் ½கப் பால் விட்டு கிளறவும்.

பின் கொஞ்ச நேரம் கழித்து ½ கப் பால் விட்டு கிளறவும்.

நன்கு கொதித்தபின் சர்க்கரை போட்டு கிளறவும்.

பின் மீதமுள்ள பாலை விட்டு கிளறவும். நன்கு கொதித்து முட்டை விடும் சமயத்தில் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய் தூள், குங்குமப்பூ போட்டு கிளறி பரிமாறவும்.

பசுமையான பச்சை பட்டாணி கீர் செய்து பிரிட்ஜில் வைத்தும் குளிர்ச்சியான நிலையிலும் பரிமாறலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News