லைஃப்ஸ்டைல்

காரசாரமான கத்தரிக்காய் பிரியாணி செய்வது எப்படி

Published On 2017-06-01 10:10 GMT   |   Update On 2017-06-01 10:10 GMT
கத்தரிக்காய் சிலருக்கு பிடிக்காது. ஆனால் கத்தரிக்காயை வைத்து இந்த முறையில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,
பிஞ்சுக் கத்திரிக் காய் - கால் கிலோ (நறுக்கவும்),
சின்ன வெங்காயம் - ஒரு கப்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
புளித்தண்ணீர் - 2 கப்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
தக்காளிச் சாறு - கால் கப்,
கொத்தமல்லித்தழை  - சிறிதளவு,
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க :

காய்ந்த மிளகாய் - 5,
தனியா - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்.



செய்முறை :

* சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

* பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

* வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்...

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

* அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

* புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News