லைஃப்ஸ்டைல்

பேச்சிலர் சமையல்: தக்காளி குழம்பு செய்வது எப்படி

Published On 2017-05-19 07:24 GMT   |   Update On 2017-05-19 07:24 GMT
தக்காளி குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. சுவையும் சூப்பராக இருக்கும். இன்று தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2,
பச்சை மிளகாய் - 1,
பூண்டு - 2 பல்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* தக்காளியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அல்லது பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பச்சை வாசனை போனதும், சீரகத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

* எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

* தக்காளி குழம்பு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News