லைஃப்ஸ்டைல்

சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி

Published On 2017-05-16 09:49 GMT   |   Update On 2017-05-16 09:49 GMT
அசைவம் பிடிக்காதவர்களுக்கு உருளைக்கிழங்கு, பிரட் வைத்து இன்று சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபமானது.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,
புதினா - கைப்பிடியளவு,
கிராம்பு - 2,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய் - 4,
உருளைக்கிழங்கு - 2 ,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,  
பொரித்த வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் - கால் கப்,
புதினா இலை - கைப்பிடியளவு,
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

அலங்கரிக்க :

பொரித்த பிரட்,
பொரித்த வெங்காயம்,
புதினா இலை - தேவையான அளவு.



செய்முறை :

* உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

* உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

* இதனுடன் பாசுமதி அரிசி, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கவும்.

* பரிமாறும் முன் பொரித்த வெங்காயம், பிரட், புதினா சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

* சூப்பரான உருளைக்கிழங்கு - பிரட் பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News