லைஃப்ஸ்டைல்

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

Published On 2017-05-15 07:37 GMT   |   Update On 2017-05-15 07:37 GMT
கோவைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இன்று கோவைக்காயை வைத்து சூப்பரான மசாலாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,
கோவைக்காய் - 200 கிராம்,
கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
வறுத்த முந்திரி - சிறிதளவு,
எண்ணெய், நெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

* குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

* பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* சூப்பரான கோவைக்காய் மசாலாபாத் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News