லைஃப்ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை செய்வது எப்படி

Published On 2017-05-13 07:47 GMT   |   Update On 2017-05-13 07:47 GMT
அனைவரும் புளியோதரை மிகவும் பிடிக்கும். அன்று ஆந்திரா ஸ்டைலில் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 6,
பச்சை மிளகாய் - 2 (கீறவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள், வெல்லம் - தலா அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டியாகக் கரைத்த புளி - கால் கப்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, வெல்லம், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

* கலவை கெட்டியான பிறகு ஆறிய சாதம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

* சூப்பரான ஆந்திரா புளியோதரை ரெடி.

* இதை அப்பளம், வடாம், சிப்ஸ் உடன் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News