லைஃப்ஸ்டைல்

மாலை நேர ஸ்நாக்ஸ் கேழ்வரகு பக்கோடா

Published On 2017-05-10 09:49 GMT   |   Update On 2017-05-10 09:49 GMT
மாலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு பக்கோடா செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 100 கிராம்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.



செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி - கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை அதில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்துக் கொள்ளவும்.

* சூப்பரான சத்தான கேழ்வரகு பக்கோடா ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News