லைஃப்ஸ்டைல்

ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி

Published On 2017-05-06 09:43 GMT   |   Update On 2017-05-06 09:43 GMT
ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. இன்று ராஜ்மாவை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று கேட்கலாம்.
தேவையான பொருட்கள் :

ராஜ்மா - 200 கிராம்,
பாசுமதி அரிசி - 100 கிராம்,
வெங்காயம் - ஒன்று),
தக்காளி - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி,
நெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

பட்டை, சோம்பு, ஏலக்காய்,



செய்முறை :


* வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில், ஊறிய ராஜ்மாவைக் களையவும். குக்கரில் ராஜ்மாவுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி பத்து விசில்கள் வரை வேக விட்டு இறக்கவும்.

* பாசுமதி அரிசியை இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு, அரிசியைத் உதிரியாக வேகவைத்து எடுக்கவும்.

* வாணலியில் நெய் விட்டு சூடானதும் பட்டை, சோம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கியதும் இதனுடன் ராஜ்மா, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

* அனைத்து ஒன்றாக சேர்ந்து வதங்கி வரும் போது உதிரியாக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*  சூப்பரான ராஜ்மா பிரியாணி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News