லைஃப்ஸ்டைல்

எளிய முறையில் புதினா மசாலா சாதம் செய்வது எப்படி

Published On 2017-05-04 07:30 GMT   |   Update On 2017-05-04 07:30 GMT
புதினா, கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. புதினா, கொத்தமல்லியை வைத்து எளிய முறையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கு
பட்டை - இரண்டு துண்டு
லவங்கம் - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - முன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
புதினா மற்றும் கொத்தமல்லி சாறு - ஒன்றை கப் (தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்)
தேங்காய் பால் - ஒன்றை கப்
உப்பு தேவையான அளவு
அரிசி - ஒன்றை கப்
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லி சாறு ஒன்றை கப், தேங்காய் பால் ஒன்றை கப், உப்பு தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும்.

* நன்றாக கொதித்து வரும் போது கழுவி வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். (புதினா கொத்தமல்லி சாறு மற்றும் தேங்காய் பால் உள்ளதால் தண்ணீர் தேவையில்லை)

* எல்லாவற்றையும் நன்றாக கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி துவி பத்திரத்தை மூடி வைக்கவும். பதினைத்து நிமிடம் கழித்து வெந்ததும் கிளறி இறக்கி பரிமாறவும்.

* சுவையான புதினா சாதம் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News