லைஃப்ஸ்டைல்

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

Published On 2017-04-25 07:25 GMT   |   Update On 2017-04-25 07:26 GMT
பேச்சிலர்கள் செய்ய மிகவும் எளிமையானது இந்த தேங்காய் பால் சாதம். எளிய முறையில் இந்த தேங்காய் பால் சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்  :

பாஸ்மதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
வெள்ளை பூண்டு - 20 பல்
பச்சை மிளகாய் - 7
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - தேவைகேற்ப
தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப
உப்பு - தேவைகேற்ப
தேங்காய் பால்  - 1 3/4 பங்கு

தாளிக்க  :

 
பட்டை,
லவங்கம்,
கிராம்பு,
ஏலக்காய்,
அன்னாசி பூ,
கல் பாசி


 
செய்முறை  :

* புதினா, கொத்தமல்லி, பூண்டு, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
 
* ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 
* கழுவி 10 நிமிடம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும்..

* பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் பாலை ஊற்றி கிளறவும்.
 
* குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து சிறிதளவு நெய் ஊற்றி கிளறி பரிமாறவும்.

* சூடான சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.
 
* இதற்கு சிக்கன் கிரேவி நல்லதொரு சைட்டிஷ்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News