லைஃப்ஸ்டைல்

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

Published On 2017-04-21 09:54 GMT   |   Update On 2017-04-21 09:54 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு ஆலு பூரி செய்து கொடுக்கலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 2 கப்,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 2
ரவை - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த ரவையுடன் கேழ்வரகு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, எண்ணெய் 1 ஸ்பூன், அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை பூரியாக உருட்டி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள பூரி மாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

* சத்தான மாலைநேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News