லைஃப்ஸ்டைல்

மாலை நேர டிபன் ரவா கிச்சடி

Published On 2017-04-10 07:34 GMT   |   Update On 2017-04-10 07:34 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ரா கிச்சடி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரவா கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ரவை - 250 கிராம்,
பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) - ஒரு கப்,
கேரட் - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - ஒன்று,  
வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
வறுத்த முந்திரிப்பருப்பு - 10,
நெய் - 50 மில்லி,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

* வெங்காயம், கேரட், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் பட்டாணி, மஞ்சள் தூள், கேரட்டை சேர்த்து வேகும் வரை வதக்கவும்.

*  காய்கள் வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர்(ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில்) ஊற்றி கொதி வந்தவுடன் ரவையை சேர்த்து கலக்கவும்.

* தேவையான உப்பு சேர்த்து, அனைத்து நன்றாக வெந்ததும் கிளறி இறக்கவும்.

* மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும்.

* சூப்பரான மாலை நேர டிபன் ரவா கிச்சடி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News