லைஃப்ஸ்டைல்

உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி

Published On 2017-04-04 07:46 GMT   |   Update On 2017-04-04 07:46 GMT
வெயில் காலத்தில் மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று உருளைக்கிழங்கை சேர்த்து மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தனியா - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
தண்ணீர் - ¼ கப்
உருளைக்கிழங்கு - 4
தயிர் - 1½ கோப்பை
கொத்தமல்லை தழை - சிறிதளவு
நீர் - ½ கப்
துருவிய தேங்காய் - ¼ கப்
உப்பு - சுவைக்கு

தாளிக்க :

எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
ஓமம் - ½ தேக்கரண்டி



செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சோர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News