லைஃப்ஸ்டைல்

மாலை நேர சிற்றுண்டி தயிர் சேமியா

Published On 2017-03-31 07:46 GMT   |   Update On 2017-03-31 07:46 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த தயிர் சேமியாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சேமியா - அரை கப்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
பால் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
பச்சை மிளகாய் - 1,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கேரட் - 1,
முந்திரிப்பருப்பு - 5,
உலர் திராட்சை - 10,
இஞ்சி - சிறிய துண்டு.



செய்முறை :

* கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தயிர், பால், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

* சேமியாவை தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்தெடுக்கவும். பின் நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் 2 அல்லது 3 முறை அலசி நீரை நன்றாக வடித்து விடவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.

* அடுத்து அதே வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்த பின் துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*  அடுத்து அதில் சேமியாவில் சேர்க்கவும்.

* சேமியாவை நன்றாக கிளறிய பின்னர் அதில் கடைந்து வைத்துள்ள தயிரை சேர்த்த பின் அடுப்பை அணைக்கவும்

* கடைசியாக கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், முந்திரி, உலர்திராட்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

* சூப்பரான தயிர் சேமியா ரெடி.

* இதை குளிரவைத்து வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். (சற்று கெட்டியாக இருந்தால் மேலும் சற்று புளிப்பில்லாத தயிரைக் கடைந்துவிட்டு அதில் சேர்த்து பரிமாறலாம்).

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News