லைஃப்ஸ்டைல்

மாலை நேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை

Published On 2017-03-18 09:58 GMT   |   Update On 2017-03-18 09:58 GMT
உளுந்து வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த மத்தூர் வடை மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிமையானது. இப்போது இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ரவை - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
மைதா மாவு - 2 ஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறு கட்டு,
உப்பு - தேவையானது,
எண்ணெய் - பொரிப்பதற்கு.



செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சூடான எண்ணெய் 2 ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.



* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து, மெல்லியதாக தட்டி, பொன்னிறமாக வரும்படி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை ரெடி.

*  தேங்காய் சட்னி, தக்காளி சாஸூடன் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News