லைஃப்ஸ்டைல்

கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி

Published On 2017-03-13 05:17 GMT   |   Update On 2017-03-13 05:17 GMT
மோர்க்குழம்பு செய்யும் போது அதில் கத்தரிக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 250 கிராம்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்



செய்முறை :

* கத்தரிக்காயை நீளமாக நறுக்கிய கொள்ளவும்.

* தயிரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும்.

* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* மிக்சியில் தனியா, பச்சைமிளகாய், சீரகம், தேங்காய், கொத்துமல்லி சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

* துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து, அதில் ஊறவைத்த பருப்புகளைச் சேர்க்கவும்.

* அடுத்து அதில் புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து, கத்தரிக்காயைப் போட்டு வேக விடவும்.

* கத்தரிக்காய் வெந்ததும் அரைத்த தனியா விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.

* பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்த மோரை ஊற்றி இறக்கவும்.

* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மோரில் கொட்டவும்.

* சூப்பரான கத்தரிக்காய் மோர்க்குழம்பு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News