லைஃப்ஸ்டைல்

சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி

Published On 2017-03-07 10:02 GMT   |   Update On 2017-03-07 10:02 GMT
குழந்தைகளுக்கு தேங்காய் சாதம் மிகவும் பிடிக்கும். வேர்க்கடலை, முந்திரி சேர்த்து தேங்காய் சாதம் செய்யும் சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் - 1 கப்
தேங்காய் துருவல் - 3/4 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10-15
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது.
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
வேர்க்கடலை - தேவைக்கு



செய்முறை :

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் முந்திரி, வேர்க்கடலை, இஞ்சி துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

* தேங்காய் நன்றாக வாசனை வர ஆரம்பித்தவுடன் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான தேங்காய் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News