லைஃப்ஸ்டைல்

சுவையான காரசாரமான தக்காளி பூண்டு சாதம்

Published On 2017-03-07 05:53 GMT   |   Update On 2017-03-07 05:53 GMT
தக்காளி பூண்டு சாதம் ஒரு நல்ல காரசாரமான உணவு. அதிலும் காலையில் சீக்கிரம் சமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த டிஷ்.
தேவையான பொருட்கள் :

அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3  
பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
இலவங்கம் - 1
கிராம்பு - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
வர மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது



செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் அரிசியை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், இலவங்கம், வர மிளகாய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் நன்றகா வதங்கியதும் அதில் பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து வதக்கவும்.

* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.

* பின் அதில் வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு சாதத்தில் ஒன்றாகும் வரை கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* இப்போது சுவையான காரமான தக்காளி பூண்டு சாதம் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News