லைஃப்ஸ்டைல்

சூப்பரான பலாச்சுளை இலை அடை

Published On 2017-03-06 09:40 GMT   |   Update On 2017-03-06 09:40 GMT
கேரளாவில் பலாப்பழம் வைத்து செய்யும் இலை அடை மிகவும் பிரபலம். இன்று இந்த பலாச்சுளை இலை அடையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பலாச்சுளைகள் - 20,
வெல்லம் - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
வாழை இலை - தேவைக்கு
நெய் - 5 டீஸ்பூன்.



செய்முறை :

* பலாச்சுளைகளை கொட்டையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கி ஆறவைக்கவும்.

* மிக்சியில் வதக்கிய பலாச்சுளையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

* அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு, தேங்காய் துருவல் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.



* வாழை இலைகளை பெரிய துண்டுகளாக வெட்டி அதில் நெய் தடவி, அதில் பிசைந்த மாவு உருண்டையை இலையின் நடுவில் வைத்து இலையை மூடி கைகளால் மாவை பரப்பி விடவும். இவ்வாறு அனைத்திலும் செய்யவும்.

* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த அடைகைளை அடுக்கி வைத்து ஆவியில் வேகவிடவும்.

* சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி.

குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News